அமரிக்காவில் மேற்குப் பகுதில் உள்ள கலிபோனியாவில் ஒரு கிழமையாக எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீ அவுஸ்திரேலிய தொலைகாட்சியில் மணிக்கொரு தடவை விபரமாக காட்டப்படுகிறது.அமரிக்கா நட்பு நாடு என்பதாலா? உண்மைதான். ஆனால் அதை விட இருநூறு அவுஸ்திரேலிய தீயணைப்பு வீரர்கள் அங்கு தீயை அணைக்க உதவி செய்வதற்கு தொண்டர்களாக அமரிக்கர்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பதே அதற்கு முக்கிய காரணமாகும்.
அவுஸ்திரேலியாவில் உள்ள யூகலிப்ரஸ் காடுகளில் கோடைகாலத்தில் திடீர் என ஏற்படும் காட்டுத்தீ மிகப் பயங்கரமானவை. பெற்ரோல் நிரம்பியுள்ள டாங்கரில் நெருப்பு பற்றியது போல் ஆரம்பித்து ,அந்த நெருப்பு உருண்டையான தீ பிளம்புகளாக பல கிலோ மீட்டர் வேகத்தில் வெடித்துக் கொண்டு வேகமாக செல்லும் இந்த பிளம்புகள் அக்கினிக் கோளங்களாக உருண்டு செல்லும் வழியில் எது இருந்தாலும் உடனே பஷ்பமாகி விடும். வீடுகள், கிராமங்களை அழித்து ,மனித உயிர்களையும் மற்றும் பண்ணை மிருகங்களையும் சாம்பலாக்கிவிடும். வருடாவருடம் கோடைகாலத்தில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவதால் இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அவுஸ்திரேலியர்கள் தீவிரமான பயிற்சி உள்ளவர்கள். விக்டோரி மாநிலத்து தீயணைப்பு படையில் ஒரு குழுவினர் கலிபோனியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைப்பதற்கு அமரிக்கர்களுக்கு உதவியாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் அனுப்பப்பட்டுள்ளார்கள்
பல நாட்களாக காட்டுத்தீ இன்னும் கலிபோனியாவில் எரிந்து கொண்டிருக்கிறது என்பதையிட்டு ஆனந்தப்படும் ஒரே சீவன் தானாகத்தான் இருக்கமுடியும் என்பது ஷரனுக்கு உள்ளத்து உணர்வில் ஒரு புறத்தில் வெட்கமாக இருந்தது. மற்ற மனிதர்களின் துன்பத்தை இட்டு ஆனந்தப்படுவது நாகரிகமானது அல்ல என்றாலும், தனிப்பட்ட ரீதியில் இந்த காட்டுத் தீ தொடர்சியாக கட்டுக் கடங்காமல் இருப்பதனால் தனக்கு நல்லது என்ற மனநிலையை தவிர்க்க முடியாது அவள் இருந்தாள். தன்னளவில் அதற்கு நியாயமும் கற்பித்துக் கொண்டாள். மற்றவர்களது துன்பத்தில், அழிவுகளில் இன்பமடைவது பெரிய முரண்பாடான விடயமாக அவளுக்கு தெரியவில்லை. அந்த மனநிலைக்கு காரணம், அங்கு எரியும் காட்டுத் தீயால்தான் இங்கு மெல்பனில் அவளுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது. நோயால் துன்பப்படுவர்களது பணத்தில் வைத்தியர்கள் வாழ்கிறார்கள். அதே போல் மற்றவர்களின் வாழ்க்கைத் துன்பங்களை வைத்து வக்கீல்கள் பணம் பண்ணுகிறார்கள். படைவீரர்களது அழிவில் அரசியல்வாதிகள் அதிகாரத்தை பெறுவதும் தொளிலாளிகளின் துன்பத்தில் முதலாளி இலாபமடைவது போல்தான் கலிபோனிய காட்டுத்தீயால் தனக்கு கிரிஸ்ரியனிடம் இருந்து தற்காலிகமாகவேனும் ஒத்தி வைக்கப்பட்ட விடுதலை கிடைத்துள்ளது என்பதால் காட்டுத்தீயால் அதியுறும் கலிபோனிய மக்கள் மீது தனக்கு அனுதாப மேற்படவில்லை என தனக்கு தானே சமாதானம் கூறிக்கொண்டாள். என்னை வக்கிரமானவள், குருரமான மனநிலை கொண்டவள் என மற்றவர்கள் நினைத்தால் தன்னை இந்த நிலைக்கு தள்ளி வைத்தவர்களே பொறுப்பாகும் என தனக்கே சமாதானம் கூறியபடி மனசாந்தியும் தேடினாள்.
காட்டுத்தீ சில நாட்களில் அணைந்து விடும். அழிந்த காடும் மீண்டும் துளிர்த்து காடாகிவிடும். ஆனால் எனது துன்பம் அப்படியானது அல்ல. மற்றவர்களால் தீராது. அதை நான் வருடங்களாக அனுபவித்து வருகிறேன். அதை யாருக்கு சொல்வது?
மெல்பேனின் மேற்கு பகுதியின் பிரதான வீதியால் செல்லுபவர்கள் தொழிற்சாலைகளினதும், நகர கழிவுகளும் கலந்து பலநாள் இறந்த மிருகத்தின் வாடைக்கும் மல வாடைக்கும் இடைப்பட்டதான ஏதோ இரசாயன மணத்தை அனுபவிக்க வேண்டும். அந்த பிரதான வீதியில் அமைந்து துர்வாடையை வெளிவிடும் தொழிற்சாலைகளுக்குக்கு சிறிது தூரத்தில் நகரக் குடியிருப்புகள் அமைந்து இருந்தாலும் காற்று பலமாக வீசும் போது லவுட்டன் நகரத்தில் உள்ளவர்கள் அசுத்த வாடைக்கு தப்ப முடியாது.
இரண்டு நாட்களாக ஷரனது இரண்டு மாடி வீட்டில் வீசும் காற்று அசுத்தமான வாடையுடன் குளிராக இருந்தாலும், பகல் நேரத்தில் யன்னல்களை திறந்தே வைத்திருந்தாள். அந்த அசுத்தக் காற்று அவளது வீட்டை எங்கும் நிறைத்து உடலைத் தழுவி கழுத்து இருந்து காலில் வரையும் உள்ள உரோமங்களின் துவாரங்களின் உள்நுளைந்து புல்லரிக்க வைக்கிறது. இனம் புரியாத இன்பமான ராகம் இதயத்தில் மீட்டப்படுகிறது. கிரிஸ்ரியன் இல்லை என்ற நினைப்பினால் ஏற்படும் கிளர்ச்சி, முழுமையான உடலுறவில் ஏற்படும் காமஉணர்வில் ஏற்படும் உன்மத்தத்தமான இன்பத்துக்கு நிகராக இருந்தது.. இந்த இரண்டு நாட்களில் பல தடவை ஷரன் நிர்வாணமாக படுக்கை அறைக்கும் குளிப்பறைக்கும் வளய வந்தாள். குளிரோ , அசுத்த வாடை எதுவும் தடையாக இருக்கவில்லை. தனது உடல் ,மனம் இரண்டிலும் தனது ஆட்சி உரிமையை நிலைநாட்ட அந்த நிர்வாணகோலம் அவளுக்கு உதவியாக இருந்தது. தனது உடலை தன்கைகளால் தடவி தான் ஒரு சூனியமில்லை. உயிரும் உணர்வும் கொண்ட பெண் என குளியலறையின் பெரிய கண்ணாடி முன்பாக பலதடவை உறுதிப்படுத்திக் கொண்டாள். தன் அழகைப் இரசிப்பதற்காக நிர்வாணமாக நிலைக்கண்ணாடி முன்பு நின்ற காலம் மறந்து, இப்பொழுது தனது இருத்தலை உறுதிப்படுத்தி பார்பதற்காக நிகை்கண்ணாடி முன் நிற்பது கேவலமாக இருந்தது.
சுதந்திரத்தை இப்படி இழந்தது யாரால்?
சுதந்திரம் என்பது கூட அவரவர் மனம் சார்ந்த அகவயமான விடயம். சிறையில் சந்தோசமாக இருப்பவர்களும் வீட்டில் சிறைப்பட்டு இருப்பவர்களும் உண்டு. உண்மையில் புள்ளிவிபரம் எடுத்தால் வீட்டில் சிறை இருப்பவர்களே அரச சிறையில் இருப்பவர்களை விட அதிகம். இதில் இவள் இரண்டாம் வகையை சேர்ந்தவள்.
சில காலங்களாக ஷரனுக்கு கிறிஸ்ரியனுடன் வீட்டில் இருப்பது காற்று புகாத அறையொன்றில் இருப்பது போன்ற மூச்சுத் திணறுகிறது இந்த சிறைவாசத்தில் இருந்து தப்ப நெருக்கடியான மனித கூட்டமொன்றில் தவறிவிட்ட சிறு குழந்தை , அந்தக் கூட்டத்தில் நிற்கும் மனிதர்களின் ,ஆயிரக்கணக்கான கால்களிடையே வெளியேறுவதற்கு சிறிய இடைவெளியை தேடுவது போன்ற மனநிலையில் தவித்தாள். தனது மனநிலையை பகிர்ந்து கொள்ளவோ, சொல்லி தோளில் தலைவைத்து ஆறுதலடைவதற்கும் ஒருவர் அவளுக்கு கிடைக்கவில்லை.
அவளது நாய் லைக்கா அடிக்கடி தனது முகத்தை அவளில் தேய்த்து ஆறுதல் அளித்து துணையாக இருந்தாலும் அதால் அவளைப் புரிந்து கொள்ள முடியுமா? ஆறுதல் வார்த்தை பரிமாற முடியுமா?
கிரிஸ்ரியன் இல்லாத அந்த குளிர்காலத்து இரவுகள் அவளுக்கு அவனைத் துணையாக அடைய முன்பு இருந்த சுதந்திரத்தை நினைவுபடுத்தின. அந்த மனவோடையில் ஓடும் சுதந்திர நீரோட்டத்தை வீட்டில் நிம்மதியாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று வயதே நிரம்பிய மகன் மார்க்கை சிறிது தூரத்தில் உள்ள அம்மாவின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, லைக்கா என்ற தனது நாயை மட்டும் துணையாக அந்தப் பெரிய வீட்டில் இருக்கிறாள்.
இப்பொழுது அனுபவிக்கும் சுதந்திரம் நிரந்தரமானது அல்ல. இரண்டு கிழமைகள் மட்டுமே என்பது ஷரனுக்கு தெரியும் . கிரிஸ்ரியன் கலிபோனியாவில் இருந்து வந்தால் மீண்டும் பழய நிலைக்கு வந்து விடும். அடி ,உதை, அதட்டல், மிரட்டல் எனும் வன்முறையின் வட்டத்தில் மீண்டும் சிக்கி சுதந்திரத்துக்கு ஏங்கும் அடிமை போல் ஆகிவிடுவாள். வெளியே சொல்ல முடியாத உடல் வன்முறை மட்டுமல்லாது அவனது பார்வை, பேச்சு ஏன் அவனது மூச்சு காற்று கூட அவளுக்கு அக்கினியாக தெரிகிறது.
கட்டிலில் படுத்தபடியே தனக்கு நடந்தவையை நினைத்தபோது அவளுக்கு நம்ப முடியவில்லை.
பலவற்றிற்கு தானே காரணம் என புரிந்தாலும் ஆத்திரம் அகங்காரமும் மனத்தில் அமைதியை ஏற்பட விடவில்லை. எங்காவது ஓடி விடவோ அல்லது எதையாவது உடைக்கவோ அவளது மனம் விரும்பியது. யாரையாவது வார்தையால் துன்புறுத்த வேண்டும் அல்லது கராத்தே முறையால் யாருக்காவது நாலு உதை விடவேண்டும் நினைப்பு திடீரென வந்தது. இரு வருடங்களாக அனுபவித்த கொடுமை நினைத்து அழுவதற்கே இடைவெளி இல்லாமல் போய்விட்டது என்ற நினைப்பு அவளை பைத்தியமாக்கியது. காயம் பட்ட மிருகத்திற்கு அழுவதற்கும், கூக்குரலிடவும் காட்டில் கிடைக்கும் சுதந்திரம் தனக்கு வீட்டில் இல்லை. தனது துன்பங்களை அம்மாவிடம் சொல்ல முடியாது. சொன்னால் நீயாக தேடிக்கொண்ட வினை என்பாள். மனத்தின் படபடப்பால், நினைவுகளிள் தொடர் பலகாலமாக உக்கிய கயிற்றை கையில் எடுத்தது போல் அறுந்தபடி இருந்தது. மன நிலை அதற்கேற்றபடி அமைதி ,குழப்பம் என இரு வேறு நிலைக்கு மாறி மாறி நிலத்திற்கும் கொப்புக்கும் தாவும் குரங்காகியது.
ஷரனின் கணவன் கிரிஸ்ரியனுக்கு கலிபோனியாவில் ஏற்றபட்ட தீயை அணைப்பதற்கு அவுஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்ட்ட இருநூறு தீயணைப்பு வீரர்களில் ஒருவன் மட்டுமல்ல அந்த குழுவுக்கு கப்டனாக அவனே சென்றுள்ளான். ஆரம்பத்தில் போகும் போதே அவள் தன்னை வெறுப்பது தெரியும். கலிபோனியாவில் இருக்கும் நாட்களில் ஷரன் பெற்றோர் வீட்டுக்கு சென்று சந்தோசமாக இருப்பாள் என நினைத்தான். ஆனால் இப்படியாக தனது வீட்டிலே இருந்து தனிமையை விரும்பி அனுபவிப்பாள் என எதிர்பார்த்திருக்கமாட்டான். அவனைப் பொறுத்தவரை தனது தவறுகளை தவறுகளாக ஏற்றுக்கொள்வது அவனுக்கு சுபாவமாக இருக்கவில்லை. தேவையில்லாமல் பொய் சொல்லுகிறாள் என்பது கிரிஸ்ரியனுக்கு ஷரன் மீது ஆத்திரத்தை அளிக்கும் விடயமாக இருந்தது.
ஷரனுக்கு சிறு தவறுகளையும் பெரிதாக்கும் தந்தை மிகவும் கண்டிப்பானவர். முன்னாள் இராணுவத்தில் கடமையாற்றிய தகப்பன் சிறுவயதில் அவளுக்கு ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். அப்படியாக கண்டிப்பான சூழ்நிலையில் வளரும் போது சிறிய குழந்தைத்தனமான தவறுகளை மறுப்பது, மறைப்பது தேவையாக இருந்தது. அதே வேளையில் சிறுவயதிலே புத்திசாதுரியமாக இருந்ததால் அது அவளுக்கு இலகுவாக இருந்தது. சிறுவயதுக் குறும்புகளை கெட்டித்தனமாக மறைப்பதில் தனது சாதுரியத்தை தானே மெச்சினாள். அழகையும் ,அறிவையும் அளவுக்கு அதிகமாக பெற்றிருந்ததால் எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் ஷரனுக்கு இருந்தது. தன்னை அளவுக்க மீறி நம்பத் தொடங்கி அந்த உணர்வு வரம்பை மீறி பாயும் வெள்ளம் போல அவள் மீது அவளுக்கு அவள் மேல் காதலாகிவிட்டது. பாடசாலையில் ஆசிரியர்கள் பலராலும் அவள் உற்சாகப்படுத்தப்பட்டு “ரொம்போய்” என செல்லமாக அழைக்கப்பட்டாள். இப்படியான பாராட்டுகள் அவளது மனத்தில் நானும் ஆண்களைப் போல் உடல் வலிமை பெற வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்கியதால், பதினைந்து வயதில் கராத்தே பயில வேண்டும் என வீட்டில் நச்சரித்து ஏற்கனவே பழகிய பலே நாட்டிய வகுப்பை இடைநிறுத்தி விட்டு புதிதாக கராத்தே வகுப்பில் சேர்ந்தாள். அந்த கராத்தை வகுப்புகளை நடத்த வந்த கிரிஸ்ரியன் காதலனாக ,கணவனாக, இப்பொழுது காலனாக தெரிகிறான்
முப்பது வயதைக் கடந்த கிரிஸ்ரியன் ஏற்கனவே திருமணம் செய்து பிரிந்து இருந்த காலத்தில்தான் மெல்பேனில் பகுதி நேரப் பயிற்சியாளராக இருந்த வேலையில் இருந்து விலகி தனது வீட்டருகில் ஒரு காராத்தே வகுப்பை சொந்தமாக தொடங்கியபோது ஒரு ரீன் ஏஜ் பெண்ணாக அந்த வகுப்பில் வந்து சேர்ந்தாள். மற்ற பிள்ளைகள் எல்லாம் சிறுவர்களாகவும் சிறுமியர்களாக இருந்தபோது இவள் மட்டும் தனியாக நடப்பட்டு உரம்போட்டதால் மதாளித்து வளரும் செவ்வாழைக் கன்று போல் தோன்றினாள். அவுஸ்திரேலியாவில் தாராளமாக கிடைக்கும் உணவு, விட்டமன்களுடன் சிறுவயதில் இருந்தே செய்த உடற்பயிற்சிகள் , வருடக்கணக்காக பயின்ற பலே நடனம் அவளுக்கு விரிந்த தோள்களும் அழகாக, செதுக்கியது போன்ற இடுப்பு என பதினைந்துவயதில் அழகை அமோகமாக அள்ளி வழங்கி இருந்தது. அவளது தேகத்தின் வளர்ச்சியால் நாலு வயது கூடுதலாக மதித்து எட்டாவது வகுப்பில் இருந்த போது பல தடவை பதினோராவதா அல்லது பன்னிரணடாவது வகுப்பா என பலரால் கேட்கப்பட்டிருக்கிறாள்.
பலே நடனம் பயின்றதால் இவளது கால்களும் கைகளும் சுதந்திரமாக இயங்கி கராத்தை பயிற்சியை இலகுவாகின. ஷரன் கராத்தே பயிற்சியில் விரைவில் தேறியதால் அவளுக்கு தனியாக பயிற்சி கொடுக்கவேண்டி இருந்தது.
அந்த நாள் எப்படி மறக்கமுடியும்?
—-
அவுஸ்திரேலியாவுக்கு உரிய யுகலிக்கப்டஸ் மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்ப்பதில்லை. அவை என்றும் இளமையாக காட்சி தரும் பெண் தெய்வங்கள் மாதிரி எக்காலத்திலும் பருவகாலங்களை வென்று பச்சைப் பசேலன காட்சி தரும். ஆனால் ஐரோப்பியர்களால் இங்கு கொண்டு வரப்பட்ட மரங்கள் இலையுதிர்காலத்தில் மஞ்சளாகி இலைகளை உதிர்த்து குளிர்காலத்தில் நிர்வாணமாக பருவகாலத்தை வெளிப்படுத்தும். நாங்கள் பகலவனுடன் புணர்சிக்கு தயாராகிவிட்டோம் என பகிரங்கமான விளம்பரப்படுத்தும் போது உள்ளுர் யுகலிக்கப்டஸ் மரங்கள் மட்டும் பச்சை சீலை போர்த்தியபடி சொல்லும் செய்தியென்ன?
நாங்கள் இந்த நாட்டின் ஆதிகுடிகள். வந்தார் வரத்தாரான உங்களப் போல் வெட்கம் கெட்டவர்கள் அல்ல என்பதா?
அது ஒரு இலையுதிர்காலத்து சனிக்கிழமையின் மாலை நேரம். மேற்குத்திசையில் சென்னிற மேகங்கள் அவசரமற்று நகர்ந்து கொண்டிருந்தன. ஆனால் பகலவன் அவசரமான வேலைக்கு செல்வது போல விரைவாக மறைந்து கொண்டிருந்தான். வெரபி கொமியுனிட்டி சென்ரரின் அருகே சிவப்பு நிற ஹோல்டன் கார் அங்கு பரந்து விரிந்து மஞ்சள் கலந்த சிவப்பு இலைகளை உதிர்தபடி நின்ற மப்பிள் மரத்தின் கீழ் நிறுத்தப்பட்டதும் பிரயாணிகள் சீட்டில் இருந்து இறங்கிய ஷரன் தோளில் சிறிய பையை கொழுவியபடி தயங்கித் தயங்கி உள்ளே நடந்தாள்.
அவளது மனத்தில் நினைவுகள் சிறிது துாரத்தில் உள்ள பிளாசாவில் உல்லாசமாக படம் பார்க்கும் தோழிகளுடன் இருந்தது. இந்த கிளாஸ் இல்லாவிடில் தோழிகளுடன் பிளாசாவில் படம் பார்க்க திட்டமிட்டு இருந்தாள். கடந்த கிழமையில்தான் அவசரமாக இவளுக்கு அடுத்த கிழமை நடக்க இருக்கும் கராத்தேயின் மஞ்சள்பட்டி தேர்வுக்காக இந்த விசேட வகுப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.
அவளது ஹகீல் அணிந்த பாதங்கள், அந்த சென்ரரின் முன்பகுதியில் உதிர்க்கப்பட்டு, மஞ்சள் சிவப்பு கலந்த கம்பளமாக தரையை மூடியிருந்த மாப்பிள் மரத்தின் இலைகளை இரண்டாக பிரித்துக் கொண்டு சென்றன. ‘ஒரு மணி நேரத்தில் சொப்பிங்கை முடித்து விட்டு வருகிறேன்’ எனத் தாய் அவளை நோக்கி கூறிய வார்த்தைகள் அவளில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. பதினைந்து வயதில் தாய் தந்தையரை முதலாவது எதிரியாக பார்க்கும் ரீன் ஏஜ் குணத்தோடு காரில் இறங்கி நடக்கும்போது புதிதாக ஒரு கவலை அவள் நினைவில் வந்து சேர்ந்தது. அவள் அலட்சியத்தோடு போட்ட மேலாடை உடலை இறுக்கவது போல் இருந்தது. அந்த இறுக்கத்துக்கு காரணம் புதிய பிராவா இல்லை வெளியாடையா என்பதே அவளது கவலையாக இருந்தது.
கராத்தே பயிற்சி வகுப்பு நடக்கும் கொம்மியுனிற்ரி ஹாலின் கதவை திறந்து உள்ளே சென்றவளுக்கு அங்கு வெளிச்சம் இல்லாமல் இருளாக இருந்தது ஏமாற்றமாக இருந்தது. தோள் பையை கழற்றி ஓரத்தில் வைத்து விட்டு வாசிங் அறையில் சென்று அங்குள்ள கண்ணாடியில் தனது ஆடை அலங்காரத்தை மீண்டும் பார்க்க சென்றாள். உள்ளே சென்று உடலை வளைத்து திருப்பி பார்த்தபோது பிராதான் இறுக்கவது என முடிவாக தெரிந்தது. அந்த இறுக்கம் கராத்தை பயிற்சிக்கு தடையாக இருக்கும் என்றதால் மேலாடையை கழற்றிவிட்டு முன்பக்கத்தை பிடித்து இழுத்து பெரிதாக்க முடியமா எனப் பார்த்தாள். அது சரி வராததால் பின்பகுதியை சிறிது சுண்டி இழுத்தபோது பிராவின் பின்பகுதியில் உள்ள இரண்டு கொக்கியில் கீழ் கொக்கி தெறித்தது. கண்ணாடியில் ஒரு முலை மேலும் மற்றது கீழுமாக தோற்றமளித்தது. ‘ஷிற் மம் , மலிவாக வாங்கினால் இப்படித்தான்’ என கூறிவிட்டு பிராவை கழற்றி குப்பைக் கூடைக்குள் எறிந்து விட்டு தலைமயிரை ஒதுக்கிட்டு முகத்தையும் உதட்டையும் கண்ணாடியில் பார்த்து விட்டு கழுத்தை திருப்பி நளினத்தை வரவழைத்து தன் அழகை வியந்தபடி சில நிமிடங்கள் நின்றாள். பின்பு வெறும் உடல் மேல் மேலாடையை மட்டும் அணிந்து அதற்கு மேல் கராத்தே உடுப்பை போட்டபோது முலைக்காம்புகள் துரித்திக் கொண்டு நிற்பதை பார்த்து, பதினைந்து வயதில் எனக்க இது அதிகம் என மார்பகங்களை பார்த்து கூறி விட்டு கிளாசை இரத்து செய்த விட்டு வீட்டுக்கு செல்வோம் என நினைத்தாலும் இப்பொழுது அம்மா வரமாட்டள். கிறிஸ்ரியனுக்கு என்ன காரணம் சொல்லி கிளாசை இரத்துப் பண்ணுவது என தன்னை நொந்து கொண்டு வாசிங் அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வரும்போது ‘ லேட்டானதற்கு என்னை மன்னிக்க வேணடும்’எனக்கேட்டபடி உள்ளே வந்தவன் வாசலில் இருந்த லைட்டின் சுவிச்சை தட்டி எரியவிட்டான. ஷரனுக்கு அவன் முன்பு நிர்வாணமாக நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டு தலை குனிந்து விட்டாள். சில வினாடியில் தன்னை சுதாரித்துக்கொண்டு ‘இன்று கிளாசை இரத்து பண்ணுவதற்கு ஏலுமா? என்றாள்.
‘ஏன் என்ன பிரச்சனை ? உடம்புக்கு முடியவில்லையா?
‘இல்லை’
‘அப்ப என்ன?’
சிறிது நேர மவுனத்தின் பின் ‘இன்று கிளாஸை நடத்தலாம். ஆனால் ஒரு நிபந்தனை’
கிறிஸ்ரியனுககு மனத்தில் சிறிது ஆத்திரம் ஏற்பட்டது. இவளுக்கு என்ன வந்தது? நிபந்தனைகள் வைக்கிறாளே?
‘இன்று என்னைப் பார்க்காமல் கிளாஸ் எடுக்க வேண்டும். எனது பிரா அறுந்து விட்டது. அதை சுழட்டி எறிந்து விட்டு வந்திருக்கிறேன்’
பதினைந்து வயதுப் பெண்ணிடம் இப்படியான பெரிய வார்த்தைகளா?
இந்த வார்த்தைகளை கிரிஸ்ரியன் எதிர்பார்காததால் மவுனமாகிட்டான்.
அவனைப் கண்களால் துளைப்பதுபோல் பார்த்தபடி நின்றாள் ஷரன்.
சிறிது நேரத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டு ‘நான் எனது மாணவிகளை அப்படி பார்ப்பது இல்லை. நீ வெட்கப்பட வேண்டியது இல்லை. பயிற்சியை தொடங்குவோம் ‘என்று சொல்லி விட்டு தனது கராத்தே உடையை அணிவதற்காக ஆண்களின் வாசிங் அறைக்க சென்றுவிட்டான்.
இந்தப் பதிலை ஷரன் எதிர்பார்கவில்லை. தன் அழகு , இளமை அந்த இடத்தில் உதாசீனப்படுத்தப்பட்டு குப்பைக் கூடையில் தனது பிரா போல் தூக்கி வீசப்பட்டதான உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. பத்து சிநேகிதிகளுடன் செல்லும் போது எதிரில் வரும் ஆண் தன்னை மட்டுமே பாரக்க வேண்டும் அல்லது பார்பான் எனபது ஷரனின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது. பல முறை இந்த விடயத்தில் பந்தயம் கட்டி விட்டு மற்றய நண்பிகளிடம் இருந்து விலகி செல்லும் போது எதிரில் வரும் ஆண் தன்னை பார்பதாக நினைப்பதுடன், மற்றவர்களுக்கு சொல்லி காட்டுவது வழக்கம். இப்படியான தற்பெருமை பல முறை ஷரனை சிநேகிதிகளிடம் இருந்து அன்னியப்படுத்துவது இவளுக்கு புரிந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை. என்னிடம் இருப்பதை விளம்பரப்படுத்துகிறேன். நீங்கள் அதற்கு எரிச்சல் அடைய வேண்டாம் என்பதே இவளது பதிலாக இருக்கும்.
கிரிஸ்ரியன் வார்த்தைகள் அவளது கர்வத்தில் ஊசியால் குத்தியது போல் வலித்தது. அவளது அழகிய வதனக்தை ஆத்திரமும் அவமானமும் கிரகணம் போல் கவ்வின. கோபத்தால் சிவந்த முகத்துடன் அங்கிருக்காமல் அந்த இடத்தை விட்டு ஓடி விட விரும்பினாள். இவனிடம் இருந்து கராத்தே கற்றுக் கொள்வதை நிறுத்தவேண்டும். இங்கிருந்து ஓடுவதுதான் நல்லது.
ஓடினால் ஐந்து கிலோமீட்டரில் இருக்கும் வீட்டுக்கு ஒடவேண்டும். அம்மாவுக்கு எப்படி காரணத்தை சொல்லுவது? இதை எப்படி புரியவைப்பது என்பதால் மனத்தை மாற்றிக்கொண்டாள். வேறு விதமாக இதற்கு முடிவு கட்டவேண்டும். ‘ஷரனை அவமானப்படுத்தியவர்கள் தப்ப முடியாது அதற்கு பதிலாக அவர்கள் பலமடங்கு அவமானப்படவேண்டும். நான் யார் என்பதை சில காலத்தில் காட்டுகிறேன். அழகையும் அறிவையும் ஒருங்கு சேர வைத்திருக்கும் நான் இவனை எனக்கு பின்னால் வர வைக்கும் வரையும் கரத்தே வகுப்புக்கு பிராவே கட்டப் போவதில்லை’ என சபதம் போட்டு வாய் விட்டு சொல்லி சிரித்தாள்.
ஷரனது முக பிரதிபலிப்புகளை காணவோ, வார்த்தைகளை கேட்கவோ கிறிஸ்ரியன் அவள் எதிரே இருக்கவில்லை. இருந்திருந்தால் இப்பொழுது என்ன சொல்லி விட்டேன்? இவளுக்கு என்ன நடந்துவிட்டது? என தன் தலையை பிய்த்துக் கொண்டிருப்பான்.அவன் வாசிங் அறையில் இருந்து காராத்தே உடையணிந்து வந்த போது ஷரனும் தன்னை சுதாரித்தக் கொண்டு பயிற்சிக்கு தயாரானாள்.
பல பிரத்தியேக வகுப்புகள் மூலம் கராத்தேயின் கறுப்பு பட்டியையை பெற்றுக்கொண்டதோடு உயர்தர பரீச்சையிலும் தேறி பல்கலைக்கழகத்தில் முதல் வருட மிருகவைத்திய மாணவியாக விட்டாள். நினைத்தது போல் கிரிஸ்ரியன் காதலியாகவும் ஆகிவிட்டதின் மூலம், நினைத்ததை முடித்த பெருமை அவளது கர்வத்தையும் அகங்காரத்தையும் கூட்டிவிட்டது.
ஷரன் பல்கலைகழகம் புகுந்தவுடனே வீட்டை விட்டு வெளியேறி கிறிஸ்ரியனுடய வீட்டில் வந்து வசிக்கத் தொடங்கியதற்கு காதலுக்கு அப்பால் ஒரு காரணம் இருந்தது. பாட்ணராக ஒன்றாக ஒரு வீட்டில் வாழும் போது சொத்துரிமை வந்துவிடுகிறது. அவுஸ்திரேலிய சட்டத்தில் ஒன்றாக கூடி வாழும் பர்டினர்கள் மனைவிக்கு சமமாக அங்கீகாரம் கிடைக்கிறது. பதினெட்டு வயதில் கிறிஸ்ரியனுடய சொத்துகள் மூலம் பல மில்லியன்களுக்கு சொந்தக்காரியாகிய விடயம் ஷரனின் பெற்றோர்கள்கூட அறிந்திருக்கவில்லை.
——
பல்கலைக்கழகம் முடிந்தவுடன் கருவுற்றதால் வேலைக்கு போகவில்லை. வீட்டில் இருந்தபடி தனது வாழ்க்கையை சந்தோசமாக கழித்தாள். அந்த காலத்தில் கிரிஸ்ரியன் அவளை பட்டுத் துணியில் பொத்தி வைத்த வைரமாக நடத்தினான். ஷரன் பட்டத்து இளவரசியை போல் அவனது வீட்டில் வலம் வந்தாள்.
அமைதியாக சென்ற அவளது வாழ்க்கையின் நீரோட்டத்தில் அலைகள் மோதியது. குழந்தை பிறந்தவுடன் வாழ்க்கையின் நுனிகரும்பு வாயில் கசந்தது. கிரிஸ்ரியனுக்கு நீண்ட நேரம் வேலை, இரவு வேலை, மற்றும் அவசர அழைப்பு போன்றவை உள்ள தீயணைப்பு படை வேலையில் ஏற்படும் உடல் களைப்புடன், ஏற்படும் மனத் தளர்வோடு வீட்டுக்கு வரும் போது முக மலரச்சியோடு தன்னை உபசரிக்கும் சாதாரண ரக மனைவியை தேடுபவனுக்கு, தனது ரீன் வருடங்களை தன்னிலும் பதினைந்து வயது கூடிய ஒருவனுக்காக தொலைத்து விட்ட அறியாமையை எண்ணி பச்சாபத்தில், விட்டதை பிடிக்கும் மனநிலையில் தனது அழகையும் அறிவையும் மேர்கூரி வெளிச்சம் போட்டு விளப்பரபடுத்த நினைக்கும் ஷரனது செயல்கள் பிடிக்கவில்லை. ஷரனது இளம் வயதின் பலதரப்பட்ட சிறு பிள்ளை விளையாட்டுகளை பொறுத்துக்கொண்டு விட்டுக்கொடுப்புகளுடன் நடந்துகொள்ள தயாராகிய கிரிஸ்ரியனுக்கு பொறுத்துகொள்ளமுடியாத விடயம் அவனது காம உணர்வுகளுடன் பூனை – எலி விளையாட்டு காட்டுவது. தனக்கு பிடிக்காதது வீட்டில் நடந்தால் அல்லது தனக்கு விரும்பிய கவனிப்பு கிறிஸ்ரியனிடம் இருந்து கிடைக்காவிடில் வேறு அறைக்குள் குழந்தையுடன் படுத்து கொள்வது, தலையிடி என சொல்லிவிட்டு மாத்திரை போடுவது போன்ற விடயங்கள் ஆரம்பத்தில் சிறுபிள்ளை விளையாட்டு போல் ஆரம்பித்தாலும் போகப் போக கிறிஸ்ரியனை பொறுமையை இழக்க வைத்தது. கைக்குழந்தைக்காரி என்றதால் மனத்துக்குள் திட்டியபடி இருந்தான். வெளிப்படையாக விரக்தியை காட்டவில்லை. ஆனால் வேலைக்கு போகவேண்டும் என ஷரன் பேசத் தொடங்கிய போது இரண்டு பேருக்கும் இடையில் உருவாகிய வாய்த்தர்க்கம் ஷரனது இடது கன்னம் கண்டி சிவப்பாகியதில் முடிந்தது. இந்த சம்பவத்தின் பின் ஒரு கிழமை குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றாள். அங்கு அதிக நாள் இருப்பதற்கான வரவேற்பு இல்லாததால் வீடு திரும்பி, வீட்டுக்கு அருகாமையில் பகுதி நேர மிருகவைத்தியராக வேலையொன்றில் சேர்ந்தாள். இரண்டு வருடங்களாக நிழல் யுத்தம் நடைபெறுகிறது. சொத்துகள் பற்றிய சிந்தனையும், சிறுகுழந்தையும் விவாகரத்தில் ஈடுபடாமல் இரண்டு வருடத்தை தள்ள வைத்தது.
இந்த இரண்டு வருடத்தில் தாய் வீட்டுக்கு செல்வதையும் தவிர்த்தாள். தந்தை இறந்தபோது தாயுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அவளை அப்படி செய்யவைத்தது.மனத்தின் சோகங்களை சொல்லி ஆறுவதற்கு வடிகாலாககூட தாயால் இருக்க முடியவில்லை. அதற்கு காரணம் தான் என்பது ஷரனுக்கு நன்றாத் தெரியும்.
கருவுற்று இருந்த போது ஷரனது தந்தை இறந்ததாக தாயின் தொலைபேசி வந்தபோது ‘உன் புருஷனுக்காக நான் வந்தாலும் அழமாட்டேன். அப்படி இருக்க நான் வந்து போவது அர்த்தமில்லாத விடயம்.’
‘இதுதான் உனது முடிவா?’
உனக்காக வேணுமென்றால் வருகிறேன்’ என்றாள்.
‘உனது தகப்பன் என்பதை நினைத்துக்கொள்’
‘அம்மா ,அவர் என்னையும் உன்னையும் கொடுமைபடுத்தியதையும் சேர்த்து நினைத்துக் கொள்கிறேன்’
‘அவர் காலத்து ஆண்கள் அப்படித்தான் வாழ்ந்தார்கள். அதுவும் இராணுவத்தில் இருந்ததால் கரடுமுரடாக இருந்தார்.’
‘அந்த கரடுமுரட்டுத்தனத்தை நான் பேசவரவில்லை. உனக்கு தெரியாமல் வேறு தொடர்பு வைத்திருந்ததை நான் நினைத்துப் பார்கிறேன்’.
‘அது ஒரு மின்னல்போல். ஆண்கள் பலருக்கு அப்படி தொடர்புகள் இருந்தது. அவரது தொடர்பு தானாக இல்லாமல் போய்விட்டது.மேலும் அதைப்பற்றி கவலைப்படவேண்டியது நான். உனக்கு என்ன வந்தது?’
‘உன்னால் அவரை இலகுவாக மன்னிக்க முடிகிறது. நான் கொலையே செய்திருப்பேன்.’
‘அப்படி கொலை செய்ய முனைந்தால் தொண்ணுறு வீதமான ஆண்கள் இறந்தும் தொண்ணுறு வீதமான பெண்கள் சிறையிலும் இருக்கவேண்டி இருக்கும். தெரியுமா?’
‘என்னால் மன்னிக்க முடியாது. நான் அதற்காக சிறை செல்வதற்கும் தயார்’
‘உன்னோடு தர்கம் செய்ய நான் தயாரில்லை. நீ வருகிறாயா இல்லையா?
‘அதுதான் உனக்காக வருகிறேன் என சொன்னேன்.’
‘அப்படியானால் நீ வரவேண்டாம்’
‘உனது விருப்பம்’
‘இப்படியான விட்டுக் கொடுப்பில்லாமல் நீ வாழ நினைத்தால் அது முடியாமல் இருக்கும் என்பதை பிற்காலத்தில புரிந்து கொள்வாய்’ என்று கூறியது நினைவில் வந்தது.’
மேல்பேன் சிட்டி வைத்தியசாலையில் வேலை கிடைத்தபோது பல வருடங்களுக்கு பின் உண்மையான சந்தோசத்தை அடைந்தாள். இந்த பதினைந்து வைத்தியர்கள் கொண்ட இடத்தில் விதம் விதமான சர்ஜரிகளும், நோய்களும் கொண்ட செல்லப்பிராணிகள் வந்து சிகிச்சை பெறுவதால் இங்கு பெறப் போகும் பயிற்சி எதிர்காலம் முழுதும் தொடர்ந்து வரும் என்பதும், இந்த பயிற்சியை வைத்து வரும்காலத்தில், சொந்தமாக தொழில் தொடங்க முடியும். அதுவே தனக்கு சுதந்திரமான எதிர்காலத்தை தோற்றுவிக்கும் என்பது அவளது எதிர்கால கனவாக இருந்தது. அவளது கனவை அறிந்ததால் கிரிஸ்ரியனுக்கு அவள் வேலைக்கு செல்வது பிடிக்கவில்லை. முழு நேர வேலை செய்தால் அது அவளது கர்வத்தையும் அகங்காரத்தையும் அதிகப்படுத்தும். அதைவிட மார்க்கை கவனிப்பது குறையும். ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களும் பகுதி நேர வேலை செய்தவள் இப்பொழுது முழு நேரம் செய்ய போவதை தடுக்க முடியாது என்பதால் அவளது இஸ்டத்துக்கு விட்டிருந்தான்.
கலிபோனியாவுக்கு கிறிஸ்ரியன் போனதால் ஷரனுக்கு தன்னை ஆசுவசப்படத்திக் கொண்டு சிந்திக்க நேரம் கிடைத்தது. .இரண்டு நாட்கள் பகலும், மூன்றாவது நாள் இரவும் தொடர்ந்து வேலை செய்யும் போது கிடைத்த இரண்டு நாள் விடுமுறை அவளுக்கு வரப்பிரசாதமாக இருந்ததது. முதல் நாள் சிகை அலங்காரத்துடன் கால், கை நகங்களை ஒழுங்கு படுத்தி கால்களின் மயிரை வக்சினால் அகற்றுவதற்கு பெரும்பாலான பகல் நேரம் களிந்து விட்டது. கடந்த நான்கு வருடங்களாக தன்னை கவனிக்காது தவறவிட்டதை நினைத்த போது அவளுக்கு கண் கலங்கியது. ரீன் காலத்தில இருந்து பல்கலைக்கழக காலத்திலும் கிரிஸ்ரியனோடு இருந்த நாட்கள் கொன்ரயினரில் வைத்து அனுப்பப்ட்ட அகதியை போல் குறைந்த பிராணவாயுவை சுவாசித்துக் கொண்டு மூச்சத் திணறியபடி வாழ்ந்திருக்கிறேன். எனக்க நானே கைவிலங்கு இட்டுக் கொண்டது என்று அம்மா சொன்னது எவ்வளவு உண்மையானது?.
எப்படி தொலைத்த நாட்களை திரும்பிப் பெறப்போகிறேன்?
நிர்வாணமாக படுத்துக் கிடந்தவளுக்கு கட்டிலின் அருகே உள்ள சிறிய மேசையில் அடல்ற் சொப்பில் நேற்று வாங்கி வந்த டில்டு பாக்கட் உடைக்கப்படாமல் கிடந்தது. எடுத்து உடைத்து பார்த்தாள். அது ஆபிரிக்க ஆணின் ஆண்குறி போல் கருமையான இரப்பரால் செய்யப்பட்டு இருந்தது. ஏற்கனவே வீட்டில் வெள்ளை ஆண்குறி இருக்கிறது. கடையில் வேண்டும் போதாவது வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான் அதைத் தேர்ந்தெடுத்தாள்.
கடந்த ஒருமாதமாக எந்த உடல் அணைப்பு இல்லாமல் இரவுகளை கழித்தாள். பல இரவுகள் வேலை என கிரிஸ்ரியன் வராமல் இருந்தான் மற்றய இரவுகளில் கட்டிலின் மறுபக்கத்தில் முகத்தை திருப்பியபடி ஷரனில் உடல்படாமல் தூங்கினான். ஷரனுக்கு அவன் நடத்தைகள் வித்தியாசமாக இருந்தாலும், இவள் வீம்பு அதை பொருட்படுத்த மறுத்தது. முழுநாள் வேலையான நாட்களில ஏற்பட்ட உடலின் களைப்பு, உடல் உறவு எண்ணத்தையே இல்லாமல் பண்ணி இருந்தது. இதனால் கிரிஸ்ரியன் புறக்கணிப்பு ஒரு விதத்தில அவளது தேவையாக இருந்தது.
பியூட்டி பார்லருக்கு போய் வரும் வழியில் அந்த அடல்ற் சொப்பின் விளம்பரப் பலகையின் கவர்சியில் உள்ளே சென்றாள். விற்பனைக்கு அங்கு நின்ற அந்த இளம் பெண், நத்தார் காலத்துக்காக வளர்க்கப்பட்ட பன்றிபோல் பருத்து கொழுப்பாக இருந்தாள். அவளது இரண்டு கைகளிலும் கறுப்புக் கலரில் டிராகன் மிருகத்தை பச்சை குத்தி இருந்தாள். இறுக்கமான கருப்பு பெனியன் அவளது பருமனை மேலும் வெளிக்காட்டியது. உடலை ஒழுங்காக பராமரித்து வைத்துக்கொள்ளத் தெரியாத ஜன்மமா இருக்கிறளே? இறுக்கமாக கட்டிய மூட்டைபோல் பிதுங்கி இருக்கும் இலச்சணத்தில் இவளுக்கு என்ன பச்சை குத்தல் வேண்டி இருக்கிறது? அந்தப் பெண் மீது இனம் புரியாத வெறுப்பு ஏற்பட்டது. நேராக டில்டோவை வைத்திருக்கு செல்புக்கு சென்று ஒரு டில்டோவை எடுத்துக்கு கொண்டு அந்த விற்பனைப் பெண்ணை நோக்கி வந்தாள் அந்த டில்டோவை எடுத்ததைக் கண்டு ‘இதைப் பாவித்த அனுபவம் உண்டா’ எனக் கேட்டபோது ‘இல்லை’ என உதடுகளை பிதுக்கி ஒன்றாக குவித்து சொன்னது அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு சிரிப்பு வந்தது.
‘முதல் தடவையா?’ என சொல்லி முடிக்க முன்பாக இடைமறித்து ‘நான் ஒரு சேர்ஜன். இதை எப்படி பாவிப்பது என கண்டு பிடிப்பேன். உமது உதவி தேவைப்படாது.’ எனக்கூறி விட்டு, வாய் பேசாது திகைத்து சிலையாக போன அந்த பெண்ணின் கைகளில் காசைக் திணித்து விட்டு வெளியே சிறிது துாரம் நடந்து விட்டு, மீண்டும் கடையின் உள்ளே சென்று அந்தப் பெண்ணிடம் வந்து ‘உமது முகம் இப்படி போனது எனக்கு பிடித்திருக்கு’என ஏளனம் கலந்த புன்னகையுடன் மிகுதிக் பணத்தை வாங்கினாள். காரில் ஏறிய போது அப்படி அந்தப் பெண்ணுக்கு அப்படி சொல்லி இருக்க கூடாது என நினைக்கவும் தவறவில்லை.
பல முறை சண்டை நடந்தாலும் ஒரு கிழமைக்கு மேல் உடலுறவு கொள்ளாமல் ஒதுங்கி இருப்பது கிரிஸ்ரியனின் வாடிக்கையல்ல. இந்த முறை ஒரு மாதமாகிவிட்டது. சிட்டி வைத்தியசாலைக்கு சேர்ந்தபின் இரண்டாம் முறையாக நான் சனிற்ரறி பாட் கட்டவேண்டி இருந்தது. அப்படியானால் நாலு கிழமைக்கு மேலாக இருக்கவேண்டும். வேலையில் நான் மறந்து போய் இருக்கலாம். கார்த்திகை மாதத்து நாய் போல் பன்னிரண்டு மாதமும் இருக்கும் கிறிஸ்ரியனால் எப்படி மறக்க முடியும்? நான் நிறைமாதத்தில் இருந்தபோது கூட தேடி அலைந்தானே? என்ன நடந்தது? ஏதாவது இரகசியத் தொடர்புகள் வேறு பெண்களுடன் ஏற்பட்டுவிட்டதா? எதற்கும் கலிபோனியாவில் இருந்து வரட்டும்.
மனத்துக்குள் சினம் கொப்பளித்தது. பாஸ்டட் நான் அடிவாங்கிக் கொண்டு அவனுக்காக அடிமை போல் இருக்கிறேன். இவனுக்கு வேறு பெண் தொடர்பு ஏற்பட்டால் இரவில் ஆளை முடிக்க வேண்டியதுதான். இதை எப்போதோ செய்திருக்க வேண்டும். மூன்று வருடத்துக்கு முன் விவாகரத்து செய்தால் நான் என்பாட்டில் போய் கொண்டிருப்பேன் என சுய களிவிரக்கம் அவளை பீடித்தது.
எழும்பி அந்த டில்டோவை எடுத்த்து உடைத்து பார்த்தாள். நிர்வாணமாக நின்ற தன்னையும் கையில் இருந்த டில்டோவையும் பார்த்து விட்டு வாய்விட்டு சிரித்தாள் ‘இந்தளவு கீழ் நிலைக்கு நான் போய் இருக்க கூடாது. வீணாக அந்த பச்சை குத்திய பெண்ணுக்கு அலுப்புக் கொடுத்தது தான் மிச்சம் ’ எனக் குப்பைக் கூடைக்குள் போட்டு அந்த குப்பை பையை கட்டி போட்ட பின்பு மீணடும் கட்டிலில் வந்த இருந்து கொண்டு கிரிஸ்ரியன் வேறு பெண்ணொருத்தியிடம் தொடர்பு ஏற்படுத்தி பிரச்சனைப்படுத்தாமல் விபசாரியிடம் போய் வந்தால் அதை என்னல் மன்னிக்க முடியும். அப்படியானாலும் ஆண் உறையை உபயோயோகித்திருப்பான் என நம்புகிறேன். தனது உடலை கவனமாக உடற் பயிற்சி செய்து பாதுகாத்து வருபவன் இந்த விடயத்தில் கவனமாக நடப்பான். இல்லாவிடில் இரத்த பரிசோதனையின் மருத்துவப்பத்திரத்தை கேட்டு விட்டுதான் உன்னோடு உடலுறவு கொள்வேன் என சொல்வேன். தன்னை நம்பவில்லை என அடிப்பான். இப்ப மட்டும் அடிக்காமல் இருக்கிறானா? என தனக்குத்தானே பேசிக்கொணடாள்.
லைக்காவை இன்றைக்கு வாக்கிங் கொண்டு செல்லவேண்டும் என்ற சிந்தனை வந்ததும் உடைமாற்றிக்கொண்டு வெளிக் கிளம்பினாள் லைக்காவின் முகதில் பாதி கறுப்பும் பாதி வெள்ளையுமான புல் ரெரியர். அவளை எதிர்பார்த்தபடி வாலை ஆட்டியபடி அவளது கால்களை சுற்றி வந்தது.
