Quantcast
Channel: Noelnadesan's Blog
Viewing all articles
Browse latest Browse all 736

அசோகனின் வைத்தியசாலை 13

$
0
0

two-bikini-girls-holding-hands
‘சாண்டரா வேலையை ராஜினாமா செய்துவிட்டு சிட்னிக்கு போய் விட்டாள்’ என்றான் சாம்
‘என்ன அப்படி அவசரமாக?’

‘சாண்ராவின் காதலி மெலிசா ஆண் நண்பரோடு சென்றுவிட்டதால் இருவரது உறவும் சண்டையில் முடிந்தது’
‘மெலிசா விட்டு போனால் ஏன் சிட்னி போக வேண்டும்? தனது வேலையை விடவேண்டும்?

‘அது உங்களுக்கு புரியாது. இவர்களது உறவில் ஒருவரை ஒருவர் விட்டு விலகுவதை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஆண்களோடு செல்வதை மிகவும் பாரிய துரோகமாக மன்னிக்க மாட்டார்கள்.’

‘இது புதுமையானது. எனது அறிவுக்கு அப்பாற்பட்ட விடயம் என நினைக்கிறேன்’எனறான் சுந்தரம்பிள்ளை

சாண்டிரா லெஸ்பியன் உறவு வைத்திருக்கும் பெண். சாமுக்கும் சுந்தரம்பிள்ளையும் சாண்டிராவை சினேகிதியாக நினைத்து பழகி வந்தனர். அவளோடு மறக்க முடியாத சம்பவம் சிலகாலத்திற்கு முன்பு இருவருக்கும் நடந்தது.

இந்த மிருக வைத்திய சாலைக்கு ஒரு ஆம்புலனன்ஸ் சேவை உண்டு. வயதானவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் நோயுற்ற செல்லபிராணிகளை வைத்தியசாலைக்கு கொண்டு வந்து வைத்தியம் பார்த்து விட்டு மீண்டும் திருப்பி கொண்டு போய் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கும் வேலை இந்த அம்புலன்சால் சாத்தியப்படும்.

இந்த வைத்திய சேவை வைத்தியசாலையின் சுற்று வட்டாரத்திலே உள்ளவர்களுக்கு மட்டும்தான் செய்வது வழக்கம். இந்த சேவைக்கு ஒரு குறைந்த அளவு பணத்தை அறவிடுவார்கள். இந்த அம்புலன்சின் சாரதியான சாண்டராவுக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். மிகவும் வேடிக்கையானவர். கள்ளம் கபடம் இல்லாமல் நேரடியாக பேசுவதும் அதே வேளையில் தன்னை சீண்டுபவர்களிடம் எடுத்து எறிந்து தூசண வார்த்தைகளை பாவிப்பதும் இவரது சுபாவம். இவர் ஒரு லெஸ்பியன். அதாவது பெண்களிடம் மட்டும் உறவு வைத்துக் கொள்பவர்.

ஆண்வர்க்கம் அலட்டிக் கொள்ளாத சாராசரிக்கும் குறைவான அழகுதான். ஆனால் சிரிப்பதும் கண்ணை விழித்து கதைப்பது கழுத்தை வெட்டுவது கவர்ச்சியாக இருக்கும். அவளது முகத்தில் மோதகத்திற்கு வைத்த முளை போன்ற சிறிய மூக்கில் ஒரு வெள்ளி வளையம் அவளது முகத்திற்கு அழகு சேர்த்து பார்பவரை மீண்டும் பார்க்கச் சொல்லும். எப்பொழுதும் பாண்டு, சட்டை அணிந்திருப்பாள். தலையும் குறப்பாக மயிரை வெட்டிய தோற்றம்.
சாண்டரா ஒரு நோயடைந்த பிராணியை கொண்டு வந்தால் அந்த பிராணிக்கு முன்னுருமை கொடுக்க வேண்டும் என்பது வைத்தியசாலை நடைமுறை. அதற்கு காரணம் சாண்டரா வேறு நோயுற்ற மிருகங்களை கொண்டு வர மீண்டும் வாகனத்தில் திரும்பி செல்லவேண்டும்.
சில வைத்தியர்கள் சாண்டராவை புறக்கணித்து காத்திருக்க வைப்பார்கள். இதை தாங்க முடியாமல் கண்டபாட்டில் தூசண வார்த்தைகளால் சாண்டரா மற்றவர்களிடம் பேசுவார். சாண்டராவின் லெஸ்பியன் பாலியல் உறவு பல பேருக்கு வெறுப்பைக் கொடுக்கிறது என்பது அவர்கள் சாண்ரா இல்லாத போது புறம் பேசுவதில் இருந்து வெளிப்படையாக தெரிந்தது.
இப்படி வெறுப்பை காட்டுபவர்களில் சிலர் மட்டுமே ஆண்கள். பெரும்பாலானவர்கள் சாண்டராவைப் பற்றி ஏளனமாக பேசி தங்கள் மன அழுத்தங்களை தீர்த்துக்கொள்வார்கள்.மற்றவர்கள் வெளியே சொல்லாமல் மவுனமானமாகவும்,மற்றவர் கூற்றுக்கு ஆமாப் போட்டும் புறக்கணிப்புகள் செய்தார்கள். ஒரு விதத்தில் தலித் சமூகத்தினரை இந்தியாவில் புறக்கணிப்பு செய்வது போன்றது என எடுத்துக் கொள்ளலாம்.

ஓரு பால் உறவுக்காரரை புறக்கணிப்பு செய்யமுடியாது என அவுஸ்திரேலியாவில் சட்டவிதிகள் இருந்தாலும் இந்த மாதிரியான புறக்கணிப்புகள், ஏளனங்களை பொறுத்து போக வேண்டிய நிலைதான் உள்ளது. இவர்களை சட்டை செய்யாமல் தனது வேலையை பார்த்துக் கொள்வதே சாண்டராவின் தனித்தன்மை. சாண்டரா மேல் இருந்த இந்த அழுத்தம் பிற்காலத்தில் லெஸ்பியனான பெண் மிருக வைத்தியர் ஜெசிக்கா வந்த போது ஆரம்பத்தில் இருந்ததை விடக் குறைந்ததை உணர்ந்து கொள்ளமுடிந்தது. ஒரு விதத்தில் இங்கேயும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் உள்ள சாதிப் புறக்கணிப்பு மாதிரியான ஒற்றுமையை சுந்தரம்பிள்ளையால் பார்க்க முடிந்தது. பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் உள்ள தாழ்தப்பட்ட சாதியில் பிறந்தவர்கள் உயர்சாதியினரால் புறக்கணிப்பவர்கள் அதே வேளையில் உயர்மட்ட உத்தியோகத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் இருந்தால் உயர்ஜாதியினர் அடங்கி தங்கள் காரியத்தைப் பார்ப்பார்கள்.

சுந்தரம்பிள்ளையை பொறுத்த விடயத்தில் சாண்டரா கொண்டு வந்த செல்லப் பிராணிகளுக்கு முன்னுரிமை அளித்து விடுவான். இந்த பாலியல் விடயம் அவர்களது தனிப்பட்ட சுதந்திரம் மட்டுமல்ல, வேலையிடத்தில் இந்த விடயங்கள் அவசியமற்றது என்பது சுந்தரம்பிள்ளையின் கருத்து. இதைவிட தன்னை லெஸ்பியன் என மறைக்காமல் சொல்லிய அவளது நேர்மையும் பிடித்திருந்தது. ஒரு முறை தியேட்டரில் ஆபிரேசன் செய்து கொண்டிருந்து போது உள்ளே வந்தததும் சுந்தரம்பிள்ளை சாண்ட்ராவின் மூக்கு வளையம் நன்றாக இருக்கிறது சொன்னதும் அங்கு வேலை செய்கு கொண்டிருந்த சாம் ‘சாண்ராவின் அடுத்த வளையத்தை நீங்கள் பார்க்கவில்லை. பார்க்காததால்தான் மூக்கு வளையத்தைப் பாராட்டுகிறீரகள்.’ பீடிகை போட்டான்

மர்மமான புன்னகை அவனது முகத்தில் மலை மேல் மழை முகில் என படிந்திருந்தது.

சுந்தரம்பிள்ளை பதில் சொல்லு முன்பு ‘அதைப் பற்றி பேசாதே பாஸ்ரட்’ என சாண்ட்ரா கூறிவிட்டு வாயைத் திறக்க முற்பட்ட சாமின் வாயை பொத்தினாள்.

சாண்டரா சராசரி பெண்களிலும் பார்க்க உயரமும் உறுதியான உடலும் கொண்டதால் சாம்மினால் அவளது கையை உடனே தள்ளி விடமுடியவில்லை. இரண்டு நிமிடங்கள் ஒருவரில் இருந்து ஒருவரை விடுவிக்க சிறிய மல்யுத்தம் ஆபிரேசன் தியேட்டரில் நடந்தது.

இருவருக்கு நடந்த இழுபறியால் மறைக்கப்பட்ட விடயத்தில் பெரிய சூக்குமம் இருப்பதாக தோன்ற, அதை அறிய சுந்தரம்பிள்ளையின் மனம் ஆவல் கொண்டது. நெக்ரரீன் பழத்தின் கொட்டையை விழுங்கி, அந்தக் கொட்டை வயிற்றில் அடைத்து மூன்று நாளாகிய பின்பு வைத்தியசாலைக்கு கொண்டு வந்த மால்ரீஸ் நாயின் குடலில் அந்த கொட்டையை வெளியே எடுப்பதற்காக் செய்த நாயின் வயிற்றை வெட்டி ஒப்பரேசனைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். அவனது கைகள் நாயின் வயிற்றின் உள்ளேயும் கண்கள் சாண்டராவிலும் இருந்தது

‘சரி நான் சிவாவுக்கு சொல்லவில்லை’ என சரணடைந்து சாம் சாண்ட்ரா பிடியில் இருந்து விலகினான்

‘கமோன் சாண்ட்ரா என்னிடம் என்ன மறைக்கிறாய்?. சாமுக்கு தெரிந்தது ஏன் ஏனக்கு தெரியக்கூடாது? என நாயின் குடலில் சிக்கிய நெக்ரரீன் கொட்டையைத் தேடியபடி

‘என்ன நாய் குடலையெல்லாம் வெளியால் எடுத்து போடுகிறாய்? என்றபடி மேசையின் அருகே வந்து நாயின் வயிற்றை உற்றுப் பார்த்தாள் சாண்டரா

‘நாயின் வயிற்றில் சிக்கிய நெக்ரரீன் கொட்டையை தேடுகிறேன். இது கடலில் மீன் பிடிப்பது போல் பொறுமையாக செய்யவேண்டும். நீ கதையை மாற்றாமல் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்’ என சொல்லிக் கொண்டு இருந்த வேளையில் சுந்தரம்பிள்ளை யின் கைவிரல்கள் இரைப்பையில் இருந்து துவங்கி நாயின் குதம்வரையும் உள்ள குடலை மெதுவாக இரண்டாவது தடைவையாக வருடிக்கொண்டு வரும்போது நடுக்குடலில் தடிப்பாக அந்த கொட்டை பிடிபட்டது. மெதுவாக இழுத்து அந்த குடல் பகுதியை நாயின் மேல் விரித்த துணிமேல் பரப்பி விட்டு சாமிடம் விசேசமான குடல் இடுக்கியை எடுக்க சொல்லி அதனால் அந்த நெக்ரரீன் கொட்டை இருந்த பகுதியின் இருபக்கத்திலும் செருகிவிட்டு குடலை வெட்டத் தொடங்கினான். ஆவலாக அருகே வந்து கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த சாண்ட்ரா ‘ஏன் வெட்டுகிறய்’? என்றாள்
‘இந்த கொட்டை அடைத்திருந்த பகுதி பழுதாகிவிட்டது. இந்த பகுதிக்கு இரத்த ஓட்டத்தைக் கொடுக்கும் இரத்தகுளாய்கள் உடைந்து விட்டதால் இந்தப் பகுதி இறந்து விடும். இந்தப் பகுதியை எடுத்தால் மட்டுமே இந்த நாய் உயிர் வாழும்’.

வெட்டிய குடலின் பகுதிகளை மீண்டும் ஒன்றாக தைக்கும் போது சாம் உதவி செய்தான். சாம் இப்பொழுது ஒப்பரேசனில் பங்கு பற்றியதால் சாணட்ரா குடலை தைப்பதற்கான உபகரணங்களை எடுத்து தருவது போன்ற மற்றய உதவிகளை செய்து கொண்டிருந்தாள். இரண்டு மணிநேரமாக நடந்த ஒப்பரேசனில் மூவரும் கவனம் செலுத்தியபடியால் ஒருவரும் அதிகம் பேசவில்லை. தைத்த குடலை சேலையினால் கழுவி வயிற்றுள் போட்டதும் சாம் மீண்டும் ‘சாணட்ரா அந்த வளையம் பற்றி சொல்லவில்லை’ என கிண்டினான். சுந்தரம்பிள்ளை தன் பங்குக்கு ‘சாண்டரா இந்த விடயம் எனக்குத் தெரியாவிட்டால் இந்த ஒப்பரேசன் செய்து இந்த நாயை காப்பாற்றிய திருப்தி எனக்கு கிடைக்காது.’

‘சாம் களிசறை . நீர் டீசண்டானவர்’ .

‘இதை அறிந்து கொள்ள நான் களிசறையாகிறேன்’

‘ஓகே போய்ஸ்’ என கூறிவிட்டு சத்திர சிகீச்சை மேசையின் அருகே வந்து தனது ஒற்றை முலையை இலங்கையில் வடமாகாணத்தில் அந்தக்காலத்தில் பஸ் ரிக்கட்டை கண்டக்டர் கொடுத்த போது வயதான பெண்கள் சிலர் மார்புக்குள் இருந்து மணிபர்ஸ்சை எடுப்பது போல் வலது கையால் இடது பக்கத்து முலையை வெளியெடுத்தாள்.

மிகவும் அருகாமையில் நடந்த விடயம் எதிர்பாராதது. சுந்தரம்பிள்ளைக்கு வாயில் எச்சில் காய்ந்துவிட்டது.இதயம் ஒரு முறை துடிக்க மறந்துவிட்டது. கையில் இருந்த ஆபரேசன் உபகரணங்கள் கையை விட்டு விலகின. இரண்டு அல்லது மூன்று விநாடிகள் மட்டும் நீடித்தது அந்த காட்சி மனத்தில் வண்ண படமாக பதிந்து விட்டது. பொன்னிற முலையின் சிவந்த காம்பில் அரை அங்குல விட்டத்தில் சிறிய வெள்ளி வளையம் மேல் கீழாக போடப்பட்டிருந்தது. அத்துடன் முலை காம்பின் மேல்ஓரத்தில் இருந்து மேல் நோக்கி சிவப்பு ரோஜா இரண்டு இலைகளுடன் மலர்ந்து இருப்பது போல் பச்சை குத்தப்பட்டிருந்தது. மனித குலத்தின் ஆதாரமானதும் அழகானதுமான அந்த இடத்தில் சிவப்பு பச்சையில் வண்ணம் தீட்டி வெள்ளியாபரணம் போட்டு மேலும் அழகு படுத்தி இருந்தாள்.

இப்பொழுகு சாம் ‘நான் பார்க்கவேண்டும்’ என பின்னால் இருந்து அருகில் வந்த போது முலையை மறைத்து விட்டு ‘ உனக்கு இல்லை’ எனக்கூறி விட்டு சாமின் முதுகில் ஓங்கி அடித்து விட்டு சான்ரா வெளியே சென்றாள்.

சுந்தரம்பிள்ளை அதிர்சியில் இருந்து மீண்டு அடி முடி ஆராச்சியில் இறங்கினான்

‘சாம் இதை எப்படி தெரிந்து கொண்டாய்?

‘சாண்ட்ரா வளையம் போட்டவுடன் வைத்திய சாலையில் வந்து தகவலை சொல்லியபோது நான் காட்ட சொன்னேன். வெகு சாதாரணமாக எனக்கு காட்டினாள்.’

‘சாணட்ரா எங்வளவு காலமாக இங்கே வேலை செய்கிறள்’?

‘ஐந்து வருடத்துக்கு மேலே’

‘தொடர்சியாக லெஸ்பியன் தானா? இல்லை இடையில் ஏற்பட்டதா?

எனக்கு தெரிந்தவரை இப்படித்தான் . நிலையாயான ஒரு பெண் துணை இல்லை. இதனால் பல விசித்திரமான சம்பவங்கள் இங்கே நடந்துள்ளது. லீசாவுக்கு சண்ட்ராவைக் கண்டால் பயம்.

‘ஏன் பயம்?

‘ஓரு நாள் பார்மசியில் லீசா குட்டையான சட்டை அணிந்தபடி கதிரையில் ஏறி உயரமான செல்புகளில் மருந்துகளை அடுக்கிக் கொண்டிருக்கும் போது அந்த வழியால் வந்த சாண்ரா ‘எவ்வளவு அழகான கால்கள்’ என சொன்னதை கேட்டதும் லீசாவுக்கு பயத்தில் கதிரையில் இருந்து விழ முயற்சித்தாள். இதைப்பார்த்து சாண்டரா லீசாயை விழாமல் பிடித்தாள். இந்தப் பிரச்சனை பெரிதாக்கி லீசா நிர்வாக குழு செயலாளரிடம் புகார் செய்தாள். பின்பு இருவரும் ஒருவரோடு வேலை செய்யக்கூடாது. நெருங்கி இருக்கக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது.

‘இது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. நான் இப்படியான விடயத்தை கேள்விப்படவில்லை.’’

‘இன்னொரு கதையை கேட்டால் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவீர்கள். இந்த நாயையை மயக்கிவிட்டு சொல்கிறேன்’ என கூறிய சாம் ஒரு கரிய டோபமான் நாயை கொண்டுவந்தான். அதன் இடது பின்னங்கால்கள் இழுத்தபடி நடந்தது.

‘இதுதான் குறுசியேற் லிகமென்ரை அறுத்த நாய்’

‘இதைத் தொடங்கினால் இன்று மாலை முடிக்க முடியுமா’? என கேட்ட படி சுந்தரம்பிள்ளை முன்கால் இரத்த குளாய் வழியே மயக்க மருந்தை செலுத்தி விட்டு அந்த காலில் சோதனை செய்தான். வழக்கப்படி அந்த லிகமென்ற் அறுந்தால் தெரியும் முழங்கால் ஈடாட்டம் அந்த மூட்டில் தெரிந்தது.

அந்த டொபமானை மேசையில் கிடத்தி மயக்க வாயுவையும் ஒட்சிசனையும் கொடுத்கு விட்டு நான் அந்த முழங்காலை வெட்ட தொடங்கியதும் சாமுக்கு அதிக வேலை இல்லை. மயக்க மருந்தின் ஆழத்தையும் சுவாசம் சீராக நடக்கிறதா என பார்பதுதான். அதைக்கூட செய்வதற்கு மெசின் இணைக்கப்பட்டு இருப்பதால் சாம் சுந்தரம்பிள்ளைக்கு கதை சொல்வதைதான் பெரும்பாலும் செய்து கொண்டிருந்தான் இலங்கையின் வட பகுதியியில் சுருட்டு தொழிலாளர்கள் வேலை செய்யும் போது இராமயணம், பாரதம் படிக்க என ஒருவர் ஒவ்வொரு கொட்டிலுக்கும் இருப்பார்கள். இங்கு சாம் அது போல் சாம் சாண்டராவின் கதையின் இரண்டாம் பாகத்தை தொடங்கினான்.

‘வைத்திய சாலையில் உள்ளவர்களில் பல பேர் கடந்த வருடம் நத்தார் பண்டிகையைக்கு முந்திய நாள் நோரேலின் வீட்டில் விருந்து வைத்தார்கள். பல வகையான மது பானங்களும் பரியாறப்பட்டது. நடந்த விருந்தில் பங்குபற்றிய சில பேர் கஞ்சாக்காரர். விருந்தின் முடிவில் அங்கு சிலர் எழும்ப முடியாமல தங்கிவிட்டார்கள். இதின் நொரேலின் தம்பி குடிவெறியில் பக்கத்தில் படுத்து கிடந்த சாண்ராவோடு உடல் உறவு கொண்டுவிட்டான். விடியத்தான் விடயம் சாண்ராவுக்கு தெரிந்ததும் அவனை கடிந்து விட்டு, ஒரு கிழமையாக வேலைக்கு வரவில்லை. எவருடனும் தொலைபேசித் தொடர்பு வைக்கவில்லை. அவளது நண்பர்கள் சாண்ராவை தேடி வீட்டுக்கு போன போது வீட்டை பூட்டிக்கொணடு இருளில் கட்டிலில் படுத்திருந்ததாக கூறினார்கள். அந்த ஒரு கிழமை சாப்பிடவில்லை. தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு உயிர் வாழ்ந்ததாக தெரிகிறது. அதன் பின்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வைத்தியம் நடந்தது. அதிர்சியில் இருந்து மீண்டு வருவதற்கு சாண்டராவுக்கு சிலகாலம் சென்றது.’

‘நொறேலின் தம்பிக்கு ஏதாவது பிரச்சனை வந்ததா?’

‘இது வன்முறையாக நடந்தது அல்ல. கஞ்சா மற்றும் மதுவெறியில் இருவரும் இருந்தாலும் ஓரளவு சாண்ராவின் சம்மதம் இருந்ததாக அவன் கூறினான்.’

‘அப்ப என்ன பிரச்சனை இதில்.’

‘லேஸ்பியனாக இருந்த சாண்ராவால் தனது தவறை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆண் தொடர்பை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதி தண்டனையை அளித்து இருப்பதாக மனவியலாளர் கூறியதாக கேள்விப்பட்டேன்.’

‘இது ஒரு சிக்கலான மனநிலை. இதை நாங்கள் புரிந்து கொள்வது கடினம்.’

சாண்டராவின் கதையை கேட்டபடி சுந்தரம்பிள்ளை மாலை நேரத்தில் அந்த டோபமானின் முழங்கால் மூட்டை சத்திர சிகீச்சையால சரிப்படுத்தி முடிக்கும் போது மீண்டும் சாண்டரா வந்தாள்

‘எப்படி நண்பர்களே’ என மகிழ்வுடன் கேட்டபடி வந்து அந்தப் பெரிய டோபமானை மேசையில் இருந்து இறக்க சாமுக்கு உதவி செய்தாள்.

‘என்ன சாண்ரா இன்று எங்களுடன் டின்னருக்கு வருகிறாயா? என கேட்டு சாம் கண் சிமிட்டினான்.

‘’நேரமில்லை.இன்று நான் ஒயிஸ்ரர் பாருக்கு போகிறேன்.’

‘அதென்ன விசேடம் அந்த பாரில்’ என்றார் சுந்தரம்பிள்ளை

‘அது மெல்பேனில் லெஸ்பியன்கள் போகும் பார்’ எனக்கூறி சிரித்தான் சாம்

அவுஸ்திரேலியாவில் சிட்னியும் மெல்பேனிலும் ஒரு பால் உறவுகளில் ஈடுபடுவர்களுக்காக தனியாக கபேக்களும் பார்களும் உண்டு. மற்ற நகரங்களிலும் நாட்டுப்புறத்திலும் இருந்து இளைஞர்களும் யுவதிகளும் சிட்னி மேல்பேனுக்கு வேலை தேடி வருவார்கள். சட்டரீதியாக இவர்கள் பாதுகாக்கப்பட்டாலும் மறைமுகமான புறக்கணிப்பு உண்டு. இரவுகளில் இரு ஆண்கள் கைகோரத்துக் கொண்டு சென்றால் அவர்கள் மற்றய இளைஞர்களால் கேலிக்குள்ளாகி அவமானப்படுத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாவது நடக்கும். பெண்களது லெஸ்பியன் உறவு ஒப்பீட்டு அளவில் பொறுத்துக்கொள்ளப்படுகிறது.

வைத்தியசாலையில் வேலை செய்பவர்களில் ஒருபால் உறவு உள்ள ஆண்கள் இருந்தாலும் தங்களை இனம் காட்டுவதில்லை. பெண்களில் சாண்ரா மற்றும் புதிதாக வந்து சேர்நத டாக்டர் ஜசிக்கா மட்டுமே வெளிப்படையாக தஙகளை வெளிக்காட்டிக் கொள்பவர்கள்..

சாண்டராவுடன் சாமும் சுந்தரம்பிள்ளையையும் அந்த ஒயிஸரபாருக்கு செல்லத் தயாராகினார்கள். ஆரம்பத்தில் சாண்ரா மறுத்துவிட்டாள். ‘உங்களை கொண்டு சென்றால் எனது நண்பர்களுக்கு பிடிக்காது. நீங்கள் எல்லாம் ஸ்ரெயிட்டானவர்கள். உங்கள் நடத்தை உங்களை காட்டிக்கொடுத்து விடும். சாம் அங்கு வந்து லெஸ்பியன் பெண்களை தன்னுடன் டேற்றுக்கு கூப்பிடக்கூடியக் கூடிய ஒரு காவாலி. எனது பெயர் கந்தலாகிவிடும்’ என்றாள்.

‘கமோன் சாண்ட்ரா அந்த கிளப்புக்கு ஸ்ரெயிட்டானவர்கள் போகக் கூடது என எந்தக் சட்டமும் இல்லை. நீ முன்னால் போ, நாங்கள் பின்னால் வருகிறோம். நீ எங்களை தெரியாது என்று சொல்லு’ என்றான் சிறிது கோபமாக.

சாண்ராவுக்கு முகம் களையிழந்து போய் விட்டது. இரண்டு கைகளையும் சுவரில் வைத்துக் கொண்டு சுவரை பார்த்தபடி சில வினாடிகள் நின்றாள். ஏதோ குற்றம் செய்து விட்டவள் போல் தனக்குள் உணர்ந்து விட்டாள் என்பதை அவளது உடல் மொழி காட்டியது.சாமின் வார்த்தைகள் அவளைப் பாதித்துவிட்டது.

மவுனமாக சில நிடங்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். பின்பு ஒரு முடிவுக்கு வந்தவளாக‘மன்னிக்கவும் நண்பர்களே. உங்களை கூட்டி செல்கிறேன். ஆனால் ஒரு வேண்டுகோள்.நீங்கள் அமைதியாக நடக்கவேண்டும்.’

‘எங்களுக்கும் ஒரு விண்ணப்பம் உள்ளது’ என்றான் சாம்

‘என்ன’?

‘நாங்கள் ஒயிஸ்ரர் கிளப்புக்கு வந்த விடயம் இங்கே ஒருவருக்கும் தெரியக் கூடாது.’

‘ஓகே அப்படியானால் என்னை இந்த வைத்தியசாலையின் வாசலில் இரவு ஏழு மணியளவில் சந்திக்கவும்.’

—-
ஓயிஸ்ரர் கிளப்புக்குக்கு வருவதாக சுந்தரம்பிள்ளை சொன்னாலும் அவன் மனத்தில் பயம் தொற்றிக் கொண்டது. இப்படி ஒரு கிளப்புக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு போக முடியாது. சொல்லாமல் சென்று விட்டு இரவு வீடு சென்று ஓவர்டைம் செய்தாதாக பொய் சொல்லவேண்டும். அவுஸ்திரேலியாவுக்க வந்த மூன்று வருடங்களில் சாதாரண நைட் கிளப்புகளுக்கே போன அனுபவம் இல்லை. மெல்பேன் நைட்கிளப்புகளுக்கும் இரவுக் கேளிக்கைகளுக்கும் பெயர் பெற்ற இடமாகும் என்பதை அறிந்தே இருந்தாலும் புலம் பெயர்ந்த பின்பு சாதாரண வாழ்க்கை தொடக்குவதே கடினமாக இருந்த போது இப்படியான கேளிக்கைகளுக்கு நேரமும் பணமும் இருக்கவில்லை. பெரும்பாலான புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை அவுஸ்திரேலியா போன்ற புகலிடங்களில் நுனிக்கரும்பை சுவைப்பது போல்தான். பலருக்கு அடியில் சுவையான பகுதி இருப்பது தெரியாத அப்பாவித்தனமாக இருப்பார்கள் .புலம் பெயர்ந்த வாழ்வு ஒரு விதத்தில் ஆழமான கடல் விழுந்தவனது நிலை போல் தொடர்ச்சியாக கால் கைகளை அடித்துக்கொண்டிருந்தால்தான் மிதக்க முடியம். அழகிய சுண்ணாம்பு பாறைகளும் வண்ண வண்ண மீன்களும் விலைமதிபற்ற முத்துக்களும் அந்தக் கடலில் நிறைந்து இருப்பது அவர்கள் கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

சாண்ராவிடம் வேடிக்கையாக கேட்ட ஒரு விடயம் இப்படி விபரீதமாக மாறிவிட்டது.அவளும் சீரியாசாக இதை எடுத்து ஒப்புக் கொண்டுவிட்டாள். சாம்மால்தான் இதெல்லாம் வந்தது. ரொப் லெஸ் பாருக்கு சென்ற பின் வேலை இடத்தில் தெரிய வந்தது மாதிரி இதுவும் தெரிய வராது என்பது என்ன நிட்சயம்?. இதை வைத்துக்கொண்டு ரிம் பாட்தோலியஸ் போன்றவர்கள் வாயை மெல்லப் போகிறார்கள் என்பதும் வயிற்றில் புளி கரைத்தது. இதே வேளையில் சுந்தரம்பிள்ளையின் மனத்தில் ஒப்புக் கொண்ட ஒரு விடயத்தில் இருந்து பின் வாங்குவது கோழைத்தனம் என்பதும் அத்துடன் புதியதை தெரிந்து கொள்ளும் ஆவலும் சேர்ந்து தயக்கத்தையும் பயத்தையும் பின் தள்ளவிட்டது.

மூன்று பேரும் ஒன்றாக காரில் அந்த மெல்பேனின் பிரதான நகர பகுதியில் உள்ள அந்த கிளப்பை அடைந்த போது மெதுவாக தூறல் விழுந்தது. இரவு நேரமானதால் கூட்டத்திற்கு குறைவில்லை. நைட்கிளப்புகள் உள்ள பிரதேசமானதால் இளையவர்கள் கூட்டத்தையே பார்க்க முடிந்தது.ஒரு நகரம் பகலிலும் இரவிலும் விளித்திருக்கு போதுதான் முழுமை பெறுகிறது. சில நகரங்கள் அலுவலகங்களை மட்டும் கொண்டதால் மாலையானதும் வெறித்து விடுகின்றன. இப்படியான இடங்கள்ளில் இரவில் நடமாட முடியாது போய்விடுகிறது. அப்படி வெறிச்சோடி விடுகிறது. பெரிய கடைகள், அலுவலகங்கள், நைட் கிளப்புகள், ஹோட்டேல்கள் எல்லாம் ஒருங்கே அமைந்திருப்பதும் அதற்கேற்றபடி பஸ், இராம் என வாகன வசதிகள் பொது மக்கள் போய்வரக் கூடியவிதத்தில் மெல்பேன் உள்ளது. முதலாவது பாராளமன்றம் உருவாகி கால் நூற்றாண்டுகளாக அவுஸ்திரேலியாவின் தலைநகராக இருந்ததும் இதற்கு காரணமாகும்.

காரை சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டு கிளப்பை நோக்கி சென்ற போது வாசலில் உள்ள பவுன்சர் சாண்ராவை பார்த்து சிரித்து விட்டு சுந்தரம்பிள்ளை உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வை சுந்தரம்பிள்ளை சுரண்டி நேரடியாக உனக்கு இங்கு என்ன வேலை எனக் கேட்பது போல் இருந்தது. அவனைப் பொறுத்தவரை இந்தியனாக தோற்றமளிக்கும் ஒருவன் இப்படியான கிளப்புக்கு வருவது முதல் முறையாக இருக்கலாம்.

ஒடுங்கிய, இருளான பாதையில் சிறிய படிககளால் மேலே சென்றடைந்ததும் அங்கே வலது புறமான இருந்த கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த பெண்ணிடம் ஆளுக்கு தலா ஐந்து டாலரை கொடுத்ததும், வலது கையில் முழங்கைக்கு கீழே ஒரு மை தோய்த்து கொண்ட முத்திரை இட்டாள். அதில் அந்த கிளப்பின் பெயர் எழுதி இருந்தது. அது பணம் கொடுத்ததற்கான அடையாள முத்திரை. பணத்திற்கு பற்றுசீட்டு கொடுக்காமல் இப்படி முத்திரை அடையாளம் கடுதாசிகளை மிச்சப்படுத்தி மரங்களின் சிதைவைக் குறைக்கும் அதே வேளையில் பணம் பெற்றதற்கான பற்றுசீட்டு இல்லாதது அரசாங்கத்திற்கு வரி கட்டுதலையும் மிச்சப்படுத்தும்.

உயரமான படிகளில் மேலே சென்றதும் அந்த கிளப் இருந்தது. புதன்கிழமையானதால் அதிக கூட்டம் இல்லை. பத்துக்கு குறைந்த ஆண்களும் பெண்களுமாக இருந்து குடித்தார்கள். சிலர் உணவை உண்டார்கள் ஒரு புறத்தில் சிறிய மேடை இருந்தது. அது நிகழ்சிகள் நடத்தும் இடம் ஆனால் அப்பொழுது வெறுமையாக இருந்தது. அதற்கு இடது பக்கததில் மதுபானம் விற்கும் பார் இருந்துது. அங்கு சென்று ஆளுக்கு ஒரு கிளாஸில் பியரை வாங்கி வந்து காலியாக இருந்த இடத்தில் மூவரும் உட்கார்ந்த சில நிமிட நேரத்தில் போது ஒரு இளம் பெண் வந்து சாண்ராவை கட்டி அணைத்து உதட்டோடு முத்தம் கொடுத்தாள். பெண்ணுக்கு ஆண் கொடுக்கும் முத்தத்தில் எவ்வளவு ஆசையிருக்குமோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் மெதுவான சத்தத்தோடு இச் இச் என பொறாமைப்படும்படி இருந்தது.

இருபது வயதைக் காட்டும் வட்டமான முகத்துடன் அவள் காதிலும் கழுத்திலும் வெள்ளி வளையங்கள் போட்டிருந்தாள். தலைமயிரை குறப்பாக வெட்டி இருந்தாள். அவளது உடல் அளவுக்கு மேல் உப்பியிருந்தது. கடவுள் கழுத்ததை வைக்க மறந்து விட்டது தெரிந்தது. இரண்டு பருத்த மார்பகங்கள் எப்பொழுதும் மேற்சட்டையை விட்டு வெளியே வரத் தயாராக இருப்பது போல் அவள் உடை இருந்தது.. அவளது உடல் அங்கங்கள் அனைத்தும் அவள் அணிந்திருந்த உடைகளை எதிரியாக நினைத்து சுதந்திரத்தை தேடித் திமிறின. மெலிசா என்று மெதுவாக கூறிவிட்டு அவளைக்கு சாண்ரா சாமையும் சுந்தரம்பிள்ளையையும் தன்னுடன் வேலை செய்பவர்கள் என அறிமுகப்படுத்தினாள். நான்கு பேரும் பியர் அருந்தும் போது சங்கீதம் தொடங்கியதும் சாண்ராவின் கைகள் அந்த பெண்ணின் இல்லாத இடுப்பை தேடி வளைத்ததது. சாம் முகத்தை திருப்பிக் கொண்டு சுந்தரம்பிள்ளையின் காதில் ‘ஆண்களின் அதிஸ்டம் மெலிசா லெஸ்பியனாக இருப்பது’ என்ற போது கெவி மெட்டல் சங்கீதம் அந்த இடத்தை புயல் போல் வந்து நிறைத்தது. இதற்காக காத்துக்கொண்டிருந்தவர்கள் போல் பலர் ஆடத் தொடங்கினார்கள்.

சங்கீதம் இப்பொழுது உச்சத்தை அடைந்தபோது பலர் இணைந்து பிணைந்து ஆடத் தொடங்கியதும் ‘நண்பர்களே, எங்கள் பியரை பார்;த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு சாண்ட்ராவும் நடனமாட சென்றுவிட்டாள். இருளாக இருந்தாலும் அந்த ஹாலின் மேலே தொங்கிய கண்ணாடி குமிழின் சுழலும் வெளிச்சத்தில் அங்கு ஆண்களும் ஆண்களும் பெண்களும் பெண்களும் முத்தமிட்டபடி ஆடுவது தெரிந்தது. சுந்தரம்பிள்ளைக்கு சிரிப்பு வந்தது. அதை பார்த்து விட்டு சாம் ‘இன்று இங்கு வந்தது தவறு. என்னால் இதை பார்க்க முடியாது. அருவருக்கிறது.’ என கூறிவிட்டு எழுந்தான். ஏற்கனவே அவனது மன நிலை புரிந்த சுந்தரம்பிள்ளைக்கு அது வியப்பாக இருக்கவில்லை.

‘கொஞ்சம் பொறு. இந்த பாட்டு முடிய சாண்ரா வந்ததும் போவோம்.’

இரு இளைஞர்கள் வந்து அந்த ஹலோ சொல்லி விட்டு மேசையில் எதிரே இருந்தனர் அவர்களை சாம் பொருட்படுத்தவில்லை. அவர்கள் சிரித்தபடி சுந்தரம்பிள்ளையிடம் நாங்கள் பியர் உங்களுக்கு வேண்டுவதாக கூறியதும் சுந்தரம்பிள்ளை இப்பொழுது குடித்தாக மறுத்தான்;. அவர்களில் ஒருவர் சுந்தரம்பிள்ளையின் தோளில் கை வைத்தபடி சிரித்தார். அந்த சிரிப்பு சுந்தரம்பிள்ளைக்கு பிடிக்கவில்லை. மெதுவாக அவனது கையை தனது தோளில் இருந்து எடுத்தார். அந்த விலக்கப்பட்ட கை தோளில் இருந்து விலகி முதுகை நோக்கி சென்ற போது அந்த கையை சாம் பிடித்து பலமாக முறுக்கினான். அவனது காதில் ‘பாஸ்ரட் நாங்கள் உன்னைப் போல் புவ்ரா இல்லை.|

அவன் வலியால் குனிந்தபடி மன்னிப்பு கேட்டான் . ஆனால் சாம் கையை விடவில்லை

‘சாம் அவனது கையை விடு’என சுந்தரம்பிள்ளை விடுவித்த போது மேசையில் இருந்த பியர்கள் தட்டுபட்டு சிதறியது. நல்ல வேளை கிளாசுகள் நிலத்தில் விழவில்லை. இருளில் நடந்ததால் இந்த சம்பவம் ஒருவரதும் கவனத்தை ஈர்க்கவில்லை.

‘இந்த இடத்தை விட்டு நாம் வெளியேறி அடுத்த தெருவில் இருக்கும் பெண்கள் நடனமாடும் கிளப்புக்கு செல்வோம். இங்க நாம் வந்தது வீண்’ என கூறிவிட்டு சுந்தரம்பிள்ளையின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான் சாம். சுந்தரம்பிள்ளையை பொறுத்தவரை சாண்டராவை தேவையில்லாமல் வலியுறுத்தி இந்த கிளப்புக்கு வந்தது ஆரம்பத்திலே பிடிக்கவில்லை. இப்படியான விடயத்தில் சாமை குருவாக நினைத்ததால் எதிர்ப்பு கூறாமல் வந்தது தவறு . அதிலும் இந்த விடயம் தேவையில்லாமல் நடந்தது என எண்ணியபடி பேசாமல் சாமை பின் தொடர்ந்தான்

ஆண்களுக்கான பிரத்தியேகமான கிளப்பிற்கு அதிக தூரம் நடக்க வேண்டிஇருக்கவில்லை . அடுத்த வீதியில் அமைந்திருந்தது. மாலைநேரத்தில் இருந்த மழைத் தூறல் நின்று விட்டது. இந்தக் கிளப்புக்கு செல்லும் பாதை வெளிச்சமாகவும் அதிக கூட்டமாக இருந்தது. மேலும் வாசலில் நின்ற பவுன்சர் எந்த வித்தியாசமான பார்வையும் பார்க்கவில்லை. மனத்தில் தயக்கமற்று, சாவகாசமாக உள்ளே சென்ற போது ஆண்களுக்கு மட்டும் பிரத்தியேகமான அந்த கிளப்பிலும் கட்டணத்தை வசூலித்துவிட்டு உள்ளே செல்லவிட்டார்கள். சிறு மேடையின் மத்தியில் உள்ள கம்பில் பெண் மார்பு , இடுப்பு கச்சை மட்டும் அணிந்து நடனமாடிக் கொண்டிருந்தாள்.அங்கும் சென்றது சாமின் கண்கள் அகல விரிந்து முகம் மலர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு ஒரு வாய் பியரை உறிஞ்சி காய்ந்த உதடுகளை நனைத்து விட்டு ‘இதை விட்டு விட்டு ஒருமணித்தியாலத்தை வீணாக்கி விட்டோம். எவ்வளவு அழகான உடம்பு’ என அந்த ஆடும் பெண்ணைப் பார்த்து கூறினான். சாமை போல் பேச கூச்சப்பட் சுந்தரம்பிள்ளை சிரித்தபடி கண்ணால் அந்தப் பெண்ணை கட்டி அணைத்தபடி ஆட்டத்தின் முடிவில் இடுப்பு கச்சையை கழற்றும் தருணத்துக்காக காத்திருந்தான். அவள் ஆட்டத்தின் போது மேடையின் அருகே வந்த போது அருகில் இருந்தவர்கள் டாலர் நோட்டுகளை இடுப்பு கச்சையில் செருகினர். அப்படி செருகியவர்கள் அருகே சென்று உடலை உராய்வதும் அவர்கள் மடியில் இருப்பதுமாக அவர்களது பணத்துக்கான சேவையை செய்தாள். அவளது உடலில் தொட முயன்ற சிலரை கைகளை சிரித்தபடியே இலாவகமாக விலக்கினாள்.

சாம் இவள் எப்பொழுது இடுப்புக் கச்சையை கழட்டுவாள்? எனக்கூறிக்கொண்டு கையில் உள்ள வாச்சைப் பார்த்தான்.

சாம்முக்கு சிறு குழந்தையுண்டு. மாலையில் வேலை முடிந்த பின் குழந்தையை பராமரித்தால்தான் மனைவியால் சமைக்க முடியும்.; சாமின் மனைவி இளம் வயது மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டதால் ஒழுங்காக சமைக்க கூட தெரியாது என சொல்லி இருந்தான்.

‘சாம் போவோமா?’

‘இல்லை இவள் இடுப்பு கச்சையை கழட்டிய பின்பு போவோம்.

‘அவள் கழட்டின பின்பு போனால் உனக்கு சாப்பாடு கிடைக்காதே?’

‘இன்று பிற்சா எடுத்துக் கொண்டுதான் வீட்டுக்கு போக வேண்டும்’

ஆணின் மனதில் இப்படியான சிந்தனைகள் கம்யுட்டரில் பரோகிராம் செய்யது போல் இருக்கின்றன. மறைப்பதும் மறுப்பதும் போலித்தனமாகிவிடுவது மட்டுமல்ல அப்படி செய்யும் போது வக்கிரமானவர்களாக பலரை மாற்றிவிடுகிறது.

அப்பொழுது ஒரு இளம் பெண் மார்பிலும் இடுப்பிலும் கச்சை மட்டும் அணிந்தபடி பார்வையாளர் மத்தியில் வந்து சாமுக்கும் சுந்தரம்பிள்ளைக்கும் இடையில் நாற்காலியையை இழுத்துப் போட்டு அமர்ந்தாள். அவளது மேனியில் வேர்வையின் ஈரம் காயாது இருந்தது. உருக்கிய தங்கத்தில் குளித்து விட்டு ஈரம் எடுக்காமல் வந்தவள் போல் காட்சியளித்தாள். தற்பொழுது நடனமாடும் பெண்ணுக்கு முன்பாக இவள் ஆடி இருக்கலாம். அவளது உடலில் எந்த இடத்திலும் அளவுக்கு மீறிய தசைப்பிடிப்போ வயிற்றில் மடிப்போ தெரியவில்லை. மார்புகள் தெறித்து விழுவது போல் இருந்ததை பார்க்காமல் இருக்க எந்த ஆணாலும் முடியாது.

குழைந்த குரலில் ‘நண்பர்களே உங்களுக்காக நான் தனிமையில் நடனமாடி எனது மார்பு கச்சையையும் இடுப்பு கச்வையையும் கழட்டுவேன். அது உங்களுக்கு வேணுமா?’

‘அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டும்’என்றான் சாம் சிரித்தபடி

‘இருபது டாலர்கள் மட்டுமே’

‘தொடமுடியுமா. நான் ஹோனி மூட்டில் இருக்கிறேன்’ என பர்சை திறக்க முயற்சித்தான்.

‘கட்டாயமாக தொடமுடியாது ,நோட்டி போய்’ என்று சாமின் தலையில் செல்லமாக குட்டினாள்.

‘எவ்வளவுக்கு பணம் கொடுத்தால் தொடமுடியும்?’

‘தற்போதைக்கு எவ்வளவு கொடுத்தாலும் முடியாது. எனது போய் பிரண்தான் இந்த கிளப்பின் மனேஜர்’ என சாவகாசமாக கூறினாள்.

‘இப்பொழுது நடனமாடும் பெண் இடுப்பில் இருந்து கச்சையை கழட்டியபின் உனது விடயத்தை யோசிக்கிறேன்’ என்றதும் அந்தப் பெண் எழும்பி சென்று விட்டாள்

அந்த நேரத்தில் மேடையில் ஆடிய பெண் இடுப்பு கச்சையை கழற்றி சுற்றி இருந்தவர்களை நோக்கி எறிந்து விட்டு அந்த கம்பத்தை சுற்றி வேகமாக சுற்றினாள். பலரது கூக்குரலில் உச்சஜதியில் எழுந்து அங்கு நிரம்பி இருந்த சங்கீதத்தை அமிழ்த்தி விட்டது.

அடுத்த பெண் ஆடுவதற்கு பதினைந்து நிமிடங்களாவது செல்லும். அவள் ஆடத் தொடங்கினால் எழும்புவதற்கு மனம் வராது. அப்படியாக இங்கு இருந்தால் இன்று இரவு சாப்பாடு கிடையாது என சாம் சுந்தரம்பிள்ளையை அழைத்தபடி வெளியே வந்தான் வந்தான். சுந்தரம்பிள்ளை சுயநிலைக்கு திரும்ப சில நிமிடங்கள் எடுத்தது.

‘சாம் இந்தப் பெணகள் தங்களது அழகை முதலாக்கி பணமாக்கிறார்கள். அதே வேளை ஆண்களை எப்படி கையாளுவது என்பதும் புரிந்திருக்கிறது.’

‘அதை விட இந்த மாதிரியான கிளப்புகளை நடத்துவது மெல்பேன் அண்டவேல்ட்டை சேர்ந்தவர்கள். கறுப்புபபணத்தை வெள்ளையாக்க இந்த கிளப்புகள் பயன்படும்.’

‘உண்மையாகவா?’

‘நான் கேள்விப்பட்டது’ என சாம் கூறியபோது வீட்டில் என்ன பொய்யை காரணத்தை சொல்லலாம் என சுநதரம்பிள்ளையை சிந்திக்க தொடங்கிவிட்டான். அப்போது இவ்வளவு நேரமும் மனத்தில் மோதியபடி இருந்த காம உணர்வு முற்றாக விடைபெற்று விட்டது.

—–

வெளிப்படையான சாண்ட்ராவின் பேச்சும் நடத்தையும் சுந்தரம்பிள்ளைக்கு பிடித்திருந்து. ஒளிவு மறைவு இல்லாமல் நட்புறவோடு இனிமையாக பழகும் சாண்டிரா வைத்தியசாலையை விட்டு சென்றது சாமுக்கும் கவலையை அளித்தது. அன்று மதியம் சுந்தரம்பிள்ளையும் சாமும் மதுசாலைக்கு சென்று பியரை அருந்தும் போது சண்டிராவின நட்பை மடடுமல்ல அவளோடு தொடர்பான சம்பவங்களையும் இரை மீட்டினர். வைத்தியசாலையில் பலர் சாண்டரா ஒரு பெண்ணாகப் பார்காமல் இரண்டும் கெட்டானாக பார்த்ததால் அவள் வைத்தியசாலையை விட்டு விலகியது அவர்களுக்கு மனத்தில் நிறைவைக் கொடுத்தது. சாண்டராவின் வேலையை புதிதாக ஒருவர் செய்ததால் வைத்தியசாலைக்கு அவளது இராஜினாமா பாதிப்பை கொடுக்கவில்லை. அறுபது வருடத்திற்கு மேலாக இயங்கும் இந்த வைத்தியசாலையை எவரது இழப்பும் பாதிக்காதது.



Viewing all articles
Browse latest Browse all 736

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!